போதுமான ஆதாரங்கள் உள்ளது

img

பிரிஜ் பூஷணுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளது:விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்

மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக தில்லி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.